பண்பாடுபுதியவை

சிறப்பாக இடம்பெற்ற பொசன் பூரணை தினம்!

இந்த ஆண்டு தேசிய பொசன் பூரணை நிகழ்வு, மிஹிந்தலை புனித பூமியை மையமாகக் கொண்டு சிறப்பாக நடைபெற்றதுடன் மிஹிந்தலை புனித பூமியில் பல்வேறு சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல், சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்த்து, அபிவிருத்தியடைந்த நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
பௌத்த தர்மத்தை பாதுகாத்து வளர்ப்பதற்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள பொறுப்பு உரிய முறையில் நிறைவேற்றப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க