இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சிறைக்கைதிகள் குறித்து விசேட அறிவிப்பு

நாளை (ஜூன் 21 ) பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளுக்கு திறந்த வெளியில் தன் உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பை சிறைச்சாலைகள் திணைக்களம் வழங்கியுள்ளது.

அத்தோடு கைதிகளின் உறவினர்களால் நாளை ஒரு கைதிக்கு போதுமான உணவு மற்றும் சுகாதார பொருட்களை வழங்கிட வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில் கைதிகளை பார்வையிடுவதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க