உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

பதற்றம் தணியவில்லை – நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்

நாடு முழுவதும் உடன் அமுலுக்குவரும் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணவேகர தெரிவித்தார்.

கம்பஹாவில் ஊரடங்கு

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உடன் அமுலுக்குவரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 6 மணிமுதல் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை,  நாட்டு மக்களை அமைதிகாக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க