இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வெள்ளப்பெருக்கு காரணமாக விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

அத்தனகலு ஓயாவைச்சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை படிப்படியாக அதிகரித்து வருவதனால் இப்பிரதேசத்திற்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதென நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கிணங்க கம்பஹா, ஜாஎல, கட்டான, வத்தளை, மினுவாங்கொடை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட தாழ்நிலப் பிரதேச மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்கும்படி நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் அப்பகுதியைச் சுற்றியுள்ள வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளும் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்பாசனத்திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க