உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

அதிக வெப்பம் காரணமாக பீகாரில் பாடசாலைகளுக்கு விடுமுறை

இந்தியாவின் மேற்கு மற்றும் வடமாநிலங்களில் வெப்பநிலையானது அதிகரித்து வருவதோடு பீகார்,உத்திரபிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் வெப்பமானது 45 டிகிரி செல்சியசை விட அதிகமாக உள்ளமையால் தற்போது இப்பகுதிகளில் வெப்ப அலை வீசிவருகின்றது.

அதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களை பகல் நேரங்களில் அனாவசியமாக வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நிலவக்கூடிய வெப்ப அதிகரிப்பு காரணமாக பீகாரில் இயங்கி வரக்கூடிய பாடசாலைகளுக்கும் பயிற்சி மையங்களுக்கும் எதிர்வரும் ஜூன் 8ம் திகதி வரை விடுமுறை வழங்கிட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க