உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இந்தியாவில் மாயமான வங்கதேச அமைச்சர் சடலமாக மீட்பு!

மேற்கு வங்கத்தில் மாயமான வங்கதேச அமைச்சரின் உடல் நேற்று (மே 22)சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு செய்த கொலை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் அமைச்சர் அன்வருல் அசீம் கடந்த 14ம் திகதி வங்கதேசத்திலிருந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு சென்றுள்ளார். பாராநகரில் தனது நண்பர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் அன்வருல் அசீம் மாயமாகியிருந்தார். இது பற்றி பொலிஸில் வங்கதேச தூதரகம் புகார் அளித்திருந்தது. இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அன்வருல் அசீம் உடல் நேற்று (மே 22) சடலமாக மீட்கப்பட்டது.

இது குறித்து பொலிஸார் கூறுகையில், 8 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வந்தாக தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நேற்று (மே 22) கொல்கத்தாவில் நியூ டவுனில் உள்ள சஞ்சீவா கார்டனின் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அன்வருல் அசீமின் உடல் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க