புதியவைவெளிநாட்டு செய்திகள்

அவுஸ்திரேலியாவில் தம்பதியினரின் சடலங்கள் மீட்பு!!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் வீதியில் உள்ள வீடு ஒன்றிற்கு முன்னால் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த வயோதிப தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

70 மற்றும் 80 வயதுக்குட்பட்ட இவர்களது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளிவராத போதிலும், இந்த மரணத்தில் சந்தேகம் இல்லை என பொலிஸார் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த தம்பதியினர் சுமார் இருபத்தைந்து வருடங்களாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர், அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை இன சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் உப தலைவராகவும் Doyne Caspersz கடமையாற்றியுள்ளார்.

கருத்து தெரிவிக்க