இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

இலஞ்சம் பெற்ற அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும் தனியார் பேருந்து ஒன்றுக்கு “C” தரம் அனுமதிப் பத்திரம் வழங்க 50,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற அதிகாரிகள் இருவரை மார்ச் மாதம் (04.03)ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரபுதிகா லங்காதினி நேற்று (20.02) மாலை உத்தரவு பிறப்பித்தார்.

அதேநேரத்தில் சந்தேகநபர்களின் சார்பில் ஆஜராகி இருந்த சட்டத்தரணி சந்தேக நபர்களில் ஒருவரான மாவட்ட முகாமையாளருக்கு சக்கரை நோய் மற்றும் இதய நோய் இருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்துள்ளதுடன்இதனை கருத்திற் கொண்டு நோய்வாய்ப்பட்ட சந்தேக நபரை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் இவர்கள் தொடர்பான வழக்கை (04.03.2024) வரை ஒத்தி வைத்த நீதிபதி வழக்கு தினத்தில் சந்தேக நபர்களை மன்றில் ஆஜர்படுத்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க