இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

15ஆவது சனத்தொகை மற்றும் வீடமைப்புக் கணக்கெடுப்பு இம்மாதம் 31ம் திகதியுடன்  நிறைவடையவுள்ளது

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட 15ஆவது சனத்தொகை மற்றும் வீடமைப்புக் கணக்கெடுப்பு இம்மாதம் 31ம் திகதியுடன்  நிறைவடையவுள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் கே.ஜி. விஜேசிறி தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் திகதி நாடு முழுவதும் மக்கள்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்புத் திட்டம் தொடங்கப்பட்டதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

” விவரங்களை சேகரிக்கும் போது மக்கள் தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பு அதிகாரிகள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டது. ஏனெனில் சில பொதுமக்கள் உதவிகரமாக இருந்தனர், சிலர் தங்கள் விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர். சிலரது வீட்டு கதவுகள் வாசல்களும்  மூடப்பட்டிருந்ததால் உள்ளே நுழைவதில் சிரமம் ஏற்பட்டது” என தெரிவித்ததுடன் , நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான விவரங்களைத் தெரிவிக்க மறுக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  அவர் மேலும் கூறினார்

கருத்து தெரிவிக்க