ஜோதிடம்

நட்சத்திர பொதுப் பலன்கள்: திருவோணம் முதல் ரேவதி வரை

இந்த பதிவில் 27 நட்சத்திரங்களில் திருவோணம் முதல் ரேவதி வரையான நட்சத்திரங்களின் பொதுப்பலன்களை காணலாம்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:

  • பலனை எதிர்பாராமல் உதவக்கூடியவர்கள்.
  • மற்றவர்களின் பிழைகளை சுட்டிக்காட்டி திருத்தும் இயல்பு உடையவர்கள்.
  • தெய்வீக வழிபாட்டில் ஈடுபாடு உடையவர்கள்.
  • பெரியவர்களிடத்தில் மரியாதை  கொண்டவர்கள்.
  • பொது  விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்பவர்கள்.
  •  நிலபுலன்கலை கொண்டவர்கள்.

 

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:

  • சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டவராக இருப்பார்கள்.
  • பலனை எதிர்பாராமல்  உதவும் எண்ணம் கொண்டவர்கள்.
  • ஆரோக்கியத்தை பேணுவதில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள்.
  • பெற்றோர் மீது அன்பு கொண்டவர்கள்.
  • அழகான தோற்றம் உடையவர்கள்.
  • புத்திக்கூர்மை உடையவர்கள்.
  • செல்வமும், செல்வாக்கும் உடையவர்கள்.

 

சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:

  • புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த நாட்டம் கொண்டவர்கள்.
  • எளிதில் மற்றவர்களை  கவரக் கூடியவர்கள்.
  • மகிழ்ச்சியான  மனநிலையை  உடையவர்கள்.
  • நெருங்கியவர்களுக்கு இனியவர்கள்.
  • ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்கள்.
  • நன்கு சிந்தித்து பின்பு செயல்படுவார்கள்.

 

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:

  • அழகான மற்றும்  சாதுரியமான பேச்சுகளால் அனைவரையும்  கவரக்கூடியவர்கள்.
  • எதிர்கால  திட்டங்களில் மிகுந்த கவனம் கொண்டவர்கள்.
  • எதிர்கால  தேவைகளுக்கான சேமிப்பில் விருப்பம் உள்ளவர்கள்.
  • வெற்றிக்காக  கடுமையாக போரடக்கூடியவர்கள்.
  • எளிதில் எல்லோரிடமும் பழகக்கூடியவர்கள்.
  • செய்தொழில் மிகுந்த ஈடுபாடுடன் செயல்படக் கூடியவர்கள்.

 

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:

  • உடல் ஆரோக்கிய விஷயங்களில் மிகுந்த கவனம் கொண்டவர்கள்.
  • எந்த சூழ்நிலையையும் சமாளிக்க கூடியவர்கள்.
  • பிறரிடம் நேர்மையையும், உண்மைமயயும் எதிர்பார்க்க கூடியவர்கள்.
  • கலைளில் விருப்பம் கொண்டவர்கள்.
  • பயணங்களில் விருப்பம் உடையவர்கள்.

 

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:

  • நெடுந்தூர பயணங்களில் விருப்பம் கொண்டவர்கள்.
  • சேமிக்கும் குணத்தைக்  கொண்டவர்கள்.
  • மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிபளிப்பவர்கள்.
  • அழகிய விழிகளைள கொண்டவர்கள்.
  • பிறருக்கு உதவும் மனப்போன்மை கொண்டவர்கள்.
  • எதற்கும் அஞ்சாதவர்கள்.

 

கருத்து தெரிவிக்க