விளையாட்டுவிளையாட்டு செய்திகள்

ஒருநாள் மற்றும் T20 தொடருக்கான இறுதி அணியை இலங்கை அறிவித்துள்ளது

சிம்பாவேக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 தொடருக்கான போட்டிகள் இரண்டிற்கும் இலங்கை கிரிக்கெட் தனது இறுதி அணியை அறிவித்துள்ளது.

சிம்பாவேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான இலங்கை அணியில் அஞ்சலோ மேத்யூஸ், பானுகா ராஜபக்சே மற்றும் பினுரா பெர்னாண்டோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிம்பாவேக்கு அணி ஜனவரி தொடக்கத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டT20 தொடரில் விளையாட உள்ளது.

T20 போட்டிக்கான 22 பேர் கொண்ட இலங்கை அணி இறுதி செய்யப்பட்டுள்ளதுடன், விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடம் ஒப்புதலும் கிடைத்துள்ளது.

T20 அணிக்கு வனிந்து ஹசரங்க தலைமை தாங்குவார், துணை கேப்டனாக சரித் அசலங்க உள்ளார்.

இதற்கிடையில், குசல் மெண்டிஸ் ஒருநாள் அணிக்கு தலைமை தாங்குவார், சரித் அசலங்க துணை கேப்டனாக உள்ளார்.

கருத்து தெரிவிக்க