இலங்கை

ஜனநாயக விழுமியங்களை நிலைநாட்டுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

 

நாட்டினது ஜனநாயக விழுமியங்களை நிலைநாட்டுமாறு கோரி மக்கள் விழிப்புணர்வு பேரணியொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விழிப்புணர்வு பேரணி சுதந்திர சதுக்கத்தில் இன்று (திங்கட்கிழமை) ‘எழுவோம் ‘ எனும் கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விழிப்புணர்வு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்துகொண்டுள்ளதுடன், புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் குழப்பநிலை காரணமாக அதிருப்தியடைந்துள்ள பொதுமக்கள் ஒன்றிணைந்து எமது தேசத்தின் ஜனநாயக விழுமியங்களை மீண்டும் நிலைநாட்டுவோம் எனும் ஜனநாயகத்திற்கான மக்கள் விழிப்புணர்வு பேரணியினை முன்னெடுத்திருந்தனர்.

கருத்து தெரிவிக்க