விளையாட்டு செய்திகள்

இந்திய கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் -பிசிசியின் புதிய தலைவர் சவுரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் என்று பிசிசியின் புதிய தலைவராக தேர்வான சவுரவ் கங்குலி கூறி உள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, பிசிசியின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். கங்குலியை தவிர வேறு யாரும் போட்டியிட மனு தாக்கல் செய்யவில்லை இதனால் அவர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுயதாவது; இன்னும் சில மாதங்களில் இந்திய கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும். அணியுடன் சேர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் இடத்தில் இருப்பது மகிழிச்சி அளிக்கிறது. நான் ஒருபோதும் பிசிசிஐ தலைவராக எந்த விருப்பத்தையும் வெளிப்படுத்தவில்லை.

பி.சி.சி.ஐ ஒழுங்காக அமைக்கப்பட வேண்டும். எந்த அரசியல்வாதியும் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. மம்தா தீதிக்கு (மேற்கு வங்காள முதல்வர்) நான் நன்றி கூறிக்கொள்கிறேன், மேலும் அவர் ஆதரவைப் பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என கூறினார்.

கங்குலி பிசிசியின் புதிய தலைவராக தேர்ந்து எடுக்கபட்டதற்கு மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, கங்குலி இந்தியாவுக்கும் மேற்கு வங்கத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார் என வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

கருத்து தெரிவிக்க