விளையாட்டு செய்திகள்

உலக மகளிர் குத்துச்சண்டை காலிறுதிக்கு இந்திய வீராங்கனை முன்னேற்றம்

உலக மகளிர் குத்துச்சண்டை காலிறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனை ஜமுவா போரோ முன்னேறியுள்ளார்.

ரஷ்யாவில் உலக மகளிர் குத்துச்சண்டை போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் 54 கிலோ எடை பிரிவில் இறுதி-16 ஆட்டம் இன்று நடந்தது.

காலிறுதி சுற்றுக்குள் நுழைவதற்கு முன் அதற்கு தகுதி பெறுவதற்காக நடைபெறும் இந்த போட்டியில், அல்ஜீரிய நாட்டை சேர்ந்த ஒயிடாட் போ மற்றும் இந்திய வீராங்கனை ஜமுவா போரோ (வயது 22) விளையாடினர்.

தொடக்கத்தில் போரோ மெல்ல விளையாட தொடங்கினார். இதன்பின் 2வது மற்றும் 3வது சுற்றுகளில் இருவரும் கடுமையாக மோதி கொண்டனர். இதில் போட்டி செல்ல செல்ல தனது ஆதிக்கம் நிலை பெறும் வகையில் போரோ தெளிவாகவும், ஆக்ரோசமுடனும் விளையாடினார்.

ஆப்பிரிக்க விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றவரான ஒயிடாடை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி போரோ காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

கருத்து தெரிவிக்க