உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் வெற்றி, பொது தேர்தலுக்கும் கொண்டு செல்லப்படும்

ஜனாதிபதி தேர்தலில் பெறப்போகும் வெற்றி பொதுத்தேர்தலுக்கு மாற்றப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிவில் சமூக பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது ரணில் இதனைக்குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய முன்னணி சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்துள்ளது.

அவரின் வெற்றிக்காக உழைக்கவேண்டும்.

இந்தநிலையில் அந்த வெற்றியைக் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றியை உறுதி செய்யவேண்டும்.

அதன் மூலம் புதிய அரசியலமைப்பை கொண்டு வரவேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

இலங்கையில் மீண்டும் வெள்ளைவேன் கலாசாரத்தை ஏற்படுத்தமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க