உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிப்பு! வடக்கு கிழக்கு மலையகத்தில் ஆரவாரம்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரின் ஆதரவாளர்கள் வெடி கொழுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தவகையில், மலையகத்தில் கண்டி, நுவரெலியா, ஹற்றன், தலவாக்கலை என பல பகுதிகளிலும் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வெடிகொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

முல்லைத்தீவின் பல இடங்களிலும் கட்சியினுடைய ஆதரவாளர்கள் வெடி கொளுத்தி கொண்டாடி வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது

குறிப்பாக மாங்குளம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பிரதான நகர் பகுதிகளில் கட்சியினுடைய ஆதரவாளர்கள் வெடி கொளுத்தி கொண்டாடியதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்த மட்டக்களப்பில் அவரது ஆதரவாளர்கள் சஜித் பிரேமதாஸவின் எதிர்காலம் எனும் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ம.ஜெகவண்ணன் தலைமையில் ஆதரவாக பேரணியில் வியாழக்கிழமை(26) மாலை ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள அவர்களது காரியாலயத்திலிருந்து சுமார் 100 இற்கு மேற்பட்ட இளைஞர்கள் சஜித் பிரேமதாஸவின் புகைப்படத்தைத் தாங்கியவாறு மோட்டார் சைக்கிளில் மட்டக்களப்பு அரசடி ஊடாக மணிக்கூட்டுக்கோபுரம், பேரூந்து தரிப்பிடம் ஊடாக மட்டக்களப்பு திருமலை வீதியூடாகச் சென்று மீண்டும் கல்லடிப் பாலத்தில் அமைந்துள்ள அவர்களது காரியாலயத்தைச் சென்றடைந்தனர்.

பட்டாசு வெடிகள் முழங்க வேற்றி எமக்கே, எமது வேட்பாளர் சஜித் ஐயா நெவம்பர் 16 ஆம் திகதி இலங்கையில் 8 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக வருவார், என பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு அவர்கள் போரணியில் ஈடுபட்டனர்.

கருத்து தெரிவிக்க