உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

840 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரினால் மீட்பு

தலைமன்னர் கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கிய நிலையில் 18 பொதிகளைக்கொண்ட ஒரு தொகுதி பீடி சுற்றும் இலைகளை கடற்படையினர் நேற்று புதன் கிழமை (25) மாலை மீட்டுள்ளனர்.
தலைமன்னார் கடறகரை பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட  சோதனை நடவடிக்கையின் போது குறித்த 18 மூடைகளில் கரை ஒதுங்கிய 840 கிலோ கிராம் பீடி இலைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
குடற்கடையினரின் சோதனை நடவடிக்கையின் போது கரை ஒதுங்கிய சந்தேகத்திற்கிடமான 18 பொதிகள் காணப்பட்டுள்ளது.
-அதனை சோதனையிட்ட போதே குறித்த பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பீடி இலைகள் கொண்ட 18 பொதிகளும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர்  ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க