உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தியகாவா பயிற்சியின் போது இராணுவ வீரர் உயிரிழப்பு

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கும்புறுபிட்டிய,25 கட்டை
பிரதேசத்தில் தியகாவா என்கின்ற முப்படை மற்றும் சர்வதேச படைகளுடனான இராணுவ பயிற்சியி இடம்பெற்று வருகின்றது.

குறித்த பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

கே.எஜ்.எப்.பிரியந்த எனும் 35 வயதுடைய இரு பெண்பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு
உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மாரப்பன,இரத்தினபுரி பிரதேசத்தை சொந்த இடமாக கொண்டவர் என
குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

கனேமுல்ல இராணுவ முகாமில் கடைமையாற்றுபவர் என அவர்கள் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

 

கருத்து தெரிவிக்க