உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 20ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மந்துவில் சந்தை வளாகத்தில் 1999 ஆம் ஆண்டு இன்றைய நாளில் சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது மக்களுடைய 20 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்றைய நாளில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வருகின்றது

வன்னிகுரோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பினுடைய ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் இன்றைய தினம் விமான தாக்குதல் இடம் பெற்ற அந்த இடத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது

1999 ஆம் ஆண்டு இன்றைய நாளில் மந்துவில் பகுதியில் சந்தை வளாகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மீது சிறிலங்கா விமானப்படையினுடைய விமானங்கள் நடத்திய தாக்குதலில் 22 பொதுமக்கள் உயிரிழந்தனர் இந்த பொதுமக்களுடைய நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்று வருகின்றது

இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்கள் உடைய உறவுகள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் நலன்விரும்பிகள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க