உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

புதிய மேலதிக மாவட்டச் செயலாளராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்

முல்லைத்தீவு  மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலாளராக  மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமிக்கப்பட்டு கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்

முல்லைத்தீவு  மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகபிரதேச செயலாளராக  கடமையாற்றி வந்த மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் 9-9-2019 முதல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின்  மேலதிக மாவட்ட செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றுக் கடமையாற்றி வருகின்றார்

2003 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவை தரம் ஒன்று உத்தியோகத்தரான மருதலிங்கம் பிரதீபன் 2004-ம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் உதவி திட்ட பணிப்பாளர் மற்றும் திட்ட பணிப்பாளராக கடமையாற்றினார்.

 2010 ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை கோப்பாய் பிரதேச செயலகத்தின் உடைய பிரதேச செயலாளராக கடமையாற்றினார்.

தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு முதல் 2019-9- 8 வரை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக கடமையாற்றி 2019-9-9 அன்று முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளராக பதவி ஏற்று தனது கடமைகளை செய்து வருகின்றார்

கருத்து தெரிவிக்க