உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்துக்கான திட்டம் இன்று மக்களிடம் கையளிப்பு

இலங்கை சத்திய சாயி சர்வதேச நிறுவனத்தின் உயரிய வேலைத்திட்டத்தில் vision of love (uk) அனுசரணையுடன் 23 விஜயபாகு காலாட்படைப் பிரிவு உழைப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமளங்குளம் கிராம மக்களுக்காக நிர்மானிக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம்  இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது

இலங்கை சத்திய சாயி சர்வதேச நிறுவனத்தின் சுமார் 17 இலட்சம் ரூபா மூலப்பொருள் செலவில் கட்டுமான வேலைகள் அனைத்தும் இராணுவத்தினரால் செய்யப்பட்டு குறித்த குடிநீர் திட்டம் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது

23-வது விஜயபாகு காவல்படை பிரிவின் பொறுப்பதிகாரி அவர்களுடைய தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் 64 படைப்பிரிவின் இராணு பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா,  இலங்கை சத்திய சாயி சர்வதேச நிறுவனத்தின் தலைவர் விக்னராஜ் மனோகரன்,  உள்ளிட்ட நிறுவன உத்தியோகத்தர்கள், அரச அதிகாரிகள் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டு மக்களுக்கான குடிநீர் திட்டத்தை மக்களிடம் கையளித்தனர்,

கருத்து தெரிவிக்க