உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மறுசீரமைக்கப்பட்டு குழந்தை பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு

வவுனியா வைத்தியசாலையில் குழந்தை பராமரிப்பு நிலையம்(டே கேயார்) மறுசீரமைப்பு செய்யபட்டு இன்றயதினம் திறந்து வைக்கபட்டது.
வவுனியா வைத்தியசாலையின் ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் 7.95 மில்லியன் நிதியில், இலங்கை கடற்படையினரால் குறித்த கட்டடம் மறுசீரமைப்பு செய்யபட்டு புதுப்பொலிவுடன் திறந்து வைக்கப்பட்டது
வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா கலந்துகொண்டு புதிய கட்டடத்தை திறந்து வைத்திருந்தார்.
நிகழ்வில் மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார்,வைத்தியர்கள், தாதியர்கள்,
வைத்தியசாலை ஊழியர்கள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்து தெரிவிக்க