உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

துறைமுக நுழைவாயில் செயற்திட்டம் இன்று ஆரம்பம்

அரசாங்கத்தின் தேசிய மூலோபாயத் திட்டத்தின் கீழான துறைமுக நுழைவாயில் நெடுஞ்சாலை செயற்திட்டம் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் கபீர் ஹாஷிம் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் தூண்களால் அமைக்கப்படும் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை இதுவெ என்றும் குறிப்பிட்டார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் இந்த வீதிக்காக 300 மி;ல்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நெடுஞ்சாலை இங்குறுகடே சந்திக்கு அருகில் களனிப் பாலத்துடன் இணைய இருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

[ அரச செய்தி திணைக்களம் ]

கருத்து தெரிவிக்க