உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘தேர்தலுக்கு தயாராகுங்கள்’ – கட்சி உறுப்பினர்களுக்கு ரணில் பணிப்புரை

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, வஜீர அபேவர்தன ஆகியோருக்குமிடையிலான சந்திப்பு இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது.

இதன்போதே பிரதமரால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை ஒக்ரோபர் 11ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

கருத்து தெரிவிக்க