உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பாரதிபுரம் மேன்காமம் பிரதான வீதியை செப்பனிட்டு தருமாறு ஊர்மக்கள் கோரிக்கை

மூதூர் பாரதிபுரம் மேன்காமம் பிரதான வீதியை செப்பனிட்டு தருமாறு அக்கிராமவாசிகள்
கோருகின்றனர்.

பாரதிபுரம் மேன்காமம் வீதியானது திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில்
உள்ள 58ம் கட்டை சந்தியில் இருந்து பாரதிபுரம் கிராமத்திற்கு வரும் பிரதான வீதி
இதுதான் இவ்வீதியில் துவிச்க்கரவண்டியால் மாத்திரமே பயணம் செய்யக்கூடியதாக
காணப்பட்கின்றது.

இவ்வீதியில் அன்றாடம் பாடசாலை மாணவர்கள் ,விவசாயிகள் ,பொதுமக்கள் உட்பட
ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர்.

ஆயினும் கிராமத்துக்குள் நுழையும் வீதியைமட்டும் குறிப்பிட்டதூரம் செப்பனிட்டு
பாரதிபரம் வீதிகள் அனைத்தும் நன்றாக உள்ளதாக காண்பிப்பது தொடர்பாக கிராமத்து
மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பாரதிபுரத்தில் சுமார் 500 குடும்பங்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே அரச அதிகாரிகளே மக்கள் பிரதி நிதிகளே தயவு செய்து இவ்வீதியை விரைவாக
செப்பணிட்டு மக்களின் நலனுக்குஉதவுமாறு இறையன்போடு அனைவரையும்
கேட்டுக்கொள்கின்றோம்.

கருத்து தெரிவிக்க