விளையாட்டு செய்திகள்

விக்கெட் கீப்பிங்கில் டோனியின் சாதனையை முந்தினார் ரிஷப் பந்த்

குறைந்த டெஸ்ட் போட்டியில் 50 பேரை ஆட்டம் இழக்க வைத்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷப் பந்த் பெற்றார்.

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 3-வது நாளில் வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர் பிராத்வெய்ட், இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

11-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய ரிஷப் பந்த் கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் வகையில் அவர் செய்த 50-வது ‘அவுட்’ இதுவாகும்.

இதன் மூலம் குறைந்த டெஸ்ட் போட்டியில் 50 பேரை ஆட்டம் இழக்க வைத்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷப் பந்த் பெற்றார்.

இதற்கு முன்பு விக்கெட் கீப்பர் டோனி 15 டெஸ்ட் போட்டியில் இந்த இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது.

கருத்து தெரிவிக்க