உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

தொடரூந்தில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

 

பேராதெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதெனிய – பிலிமத்தலாவ தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்துடன் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 11.45 இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொல்கஹவெலயில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தொடருந்தில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

பிலிமத்தலாவ, ரணவக பகுதியை சேர்ந்த 23 வயதுடைய புத்திக பிரதீப் எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பில் பேராதெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க