வெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தானில் கோர விபத்து; 24 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று இரவு சென்ற பெருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பாக்ரா என்ற பகுதியில் வரும்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது என மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க