உள்நாட்டு செய்திகள்புதியவை

ஜனாதிபதி வடக்குக்கு விஜயம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ளார்.

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ வேலைத்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தில் முதல்கட்டமாக பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்துக்கான அடிக்கல்லை மைத்திரிபால சிறிசேன நாட்டவுள்ளார். தொடர்ந்து அலுவலகம் ஒன்றையும் திறக்க உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து வடமராட்சியில் அமைக்கப்பட்டவுள்ள பெரும் நீர்த் தேக்கத்துக்கான வேலைகளையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

தொடர்ந்து பல்வேறு திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்று அதன்பின்னர் பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் மக்கள் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

கருத்து தெரிவிக்க