உள்நாட்டு செய்திகள்புதியவை

தண்டனை சட்டத்தை மீறுவோருக்கான அபராதம் அதிகரிப்பு

தண்டனைச் சட்டத்தை மீறுவதற்காக விதிக்கப்பட்ட அபராதங்களை அதிகரிப்பதற்கு பிரேரணை ஒன்றை தயாரிக்க சட்ட துறைக்கு நீதி அமைச்சு அறிவுறுத்த உள்ளது.

தற்போதுள்ள சட்டங்களின் குறைபாடுகளை ஆய்வு செய்ய ஒரு குழு நியமிக்கப்பட்டது, குறித்த குழுவின் ஆய்வுகளில் இருந்து மீறல்கள் அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தண்டனைச் சட்டத்தின் கீழ் செய்யப்படும் குற்றங்களுக்கு அபராதம் அதிகரிக்க குறித்த குழு பரிந்துரை செய்திருந்தது.

அதன்படி, நீதி அமைச்சர் தலத அத்துகோரல இது தொடர்பான அமைச்சரவை முன்மொழிவை சமர்ப்பித்திருந்தார், அதைத் தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 27) இதற்கு அமைச்சரவை அனுமதி அளிக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க