உள்நாட்டு செய்திகள்புதியவை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட அறிக்கையை சமர்ப்பிக்க அனுமதி!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இலங்கை கேட்ரிங் மற்றும் மிஹின் லங்கா தொடர்பான ஜனாதிபதி ஆணையத்தின் அறிக்கையை சட்ட ஆலோசனைக்காக சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இது தொடர்பான ஒரு முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.

அரச அமைப்புகளின் முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைகுழு கடந்த மாதம் தனது அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது.

ஜனவரி 1, 2006 மற்றும் ஜனவரி 31, 2018 க்கு இடையில் நடந்த முறைகேடுகள் குறித்து அதன் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் 32 விடயங்களை ஆணைகுழு பட்டியலிட்டிருந்தது.

கருத்து தெரிவிக்க