உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

குப்பைகளை ஏற்றி செல்லும் பாரவூர்திகளுக்கு பலத்த பாதுகாப்பு

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை அருவக்காட்டுக்குக் கொண்டுசெல்லும் வீதிகளில் பாதுகாப்பிற்காக 100 இற்கும் அதிகமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், நடமாடும் பாதுகாப்பு சேவையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குப்பைகளைக் கொண்டுசெல்லும் லொறிகள் பல தடவைகள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளமையினால் பலத்த பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கொழும்பு மாநகர சபையிடம் வினவியபோது, பரவூர்திகள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் நபர்களுக்கு பொது சொத்துக்களை சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த பரவூர்திகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க