உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பதுரலிய பிரதேசத்தில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை

பதுரலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நபரொருவர் கொவி ஜனபதய பிரதேசத்தில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று [26.08.2019 ]மலை 4 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொவி ஜனபதய பிரதேசத்தில் இரண்டு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கத்தின் காரணமாக, இருவரில் ஒருவர் மற்றவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

72 வயதுடைய மஹகுமாரகே பிரேமதாச எனும் நபரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுளளார்.

பிரேத பரிசோதனை இன்று நடைபெறவிருக்கின்றது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கொலையை செய்த, அதே பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பதுரலிய பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

கருத்து தெரிவிக்க