உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

பங்காளிகளை அவசரமாக சந்திக்கிறார் சஜித்!

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன், ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச பேச்சு நடத்தவுள்ளார்.

இன்று அல்லது நாளை இந்த சந்திப்பு இடம்பெறும் என்று சஜித் ஆதரவு அணி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ‘ஊடகனி’டம் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்ப்பார்த்துள்ள தனக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு இதன்போது பங்காளிகளிடம் சஜித் கோரிக்கை விடுக்கவுள்ளார்.

அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தோழமைக்கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று மாலை அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

 

கருத்து தெரிவிக்க