உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

அனைவருக்கும் சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்த வேண்டும் – சஜித்

நாட்டிலுள்ள அனைவருக்கும் சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தப் போவதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச உறுதி அளித்துள்ளார்.

அனைவருக்கும் நிழல் வேலைத்திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை – கரமெட்டிய சந்தைக் கட்டிடத்தொகுதியை நேற்று மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்விலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமது தரப்பினருக்கு தேசிய நோக்கும், நடைமுறைசார் நிபுணத்துவமும் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பரம்பரையினர் உள்ளடங்கலாக சகலருக்கும் சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தப் போவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

[அரசாங்க தகவல் திணைக்களம் ]

கருத்து தெரிவிக்க