பொன்மொழிகள்

சிந்தனைத்துளிகள்! – கண்ணதாசன்

  • தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்.
  • அழும்போது தனிமையில் அழு, சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி, கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள், தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.
  • மனிதர்கள் பெறும் புகழ் இரண்டு வகைப்படும். ஒன்று பெற்று சாவது, இன்னொன்று செத்து பெறுவது. சரித்திரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பெற்றுச் செத்தவர்கள். கோடிக்கணக்கானவர்கள் செத்து பெற்றவர்கள்.
  • நாம் விரும்பி பிறக்காதது போல நடக்கும் காரியங்களும் நாம் விரும்பி நடப்பவை அல்ல.

கருத்து தெரிவிக்க