உள்நாட்டு செய்திகள்புதியவை

‘இராணுவத் தளபதியின் நியமனம் சரியானது’ மஹிந்த

புதிய இராணுவத் தளபதியின் நியமனம் சரியானதே என மொட்டு அணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம், ருவன்வெலிசாய விகாரையின் விஹாரதிபதியை நேற்று (23) பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போதே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், தலைமைத்துவ குழப்பத்தால் ஐக்கிய தேசிய கட்சிக்குள் நெருக்கடி நிலை உச்சம் அடைந்துள்ளது.

இதேவேளை அரசாங்கம் மீண்டும் எம்மை பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அதற்கு வெகுவரைவில் மக்கள் பதில் அளிப்பார்கள் எனவும் அவர் கூறினார்.

கருத்து தெரிவிக்க