உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

காட்டுத்தீயினால் 20 ஏக்கர் வனப்பிரதேசம் அழிவு

எல்ல வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக 20 ஏக்கர் வனப்பிரதேசம் அழிவடைந்துள்ளது.

நேற்று மாலை ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுப்படுத்த முப்படையினர், தீயணைப்பு படையினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர். தீவிபத்தால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை மொனராகலை மரகல வனப்பகுதியிலும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க