உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

உப்புக்குளம் பகுதியில் 1.460 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு

கடற்படை மற்றும் முல்லைதீவு பொலிஸ் சிறப்பு படையணி இணைந்து நேற்று (22) அதிகாலையில் முல்லைதீவு, உப்புக்குளம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது 1.460 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு படையணி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் காரணமாக கடத்தல்காரர்கள் கேரளா கஞ்சா பொதியை கைவிட்டு தப்பி சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட கேரளா கஞ்சா மேலதிக விசாரணைக்காக முல்லைதீவு பொலிஸ் சிறப்பு படையணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க