உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

போதிய நிதி உதவி இல்லாத நிலையில் பிரதேச சபை இயங்கிவருகின்றது

மட்டக்களப்பு – போதிய நிதி உதவிகளோ வளங்களோ இல்லாத நிலையில் மண்முனை மேற்கு பிரதேச சபை இயங்கிவருவதாக அதன் தலைவர் எஸ். சண்முகராஜா தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக வியாழக்கிழமை (22.08.2019) கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

மண்முனை மேற்கு பிரதேச சபை ஊடாக செய்யவேண்டிய திட்டங்கள் பல இருந்தும் அதற்கான நிதி உதவிகளோ வளங்களோ இல்லாத நிலையில் நாம் இருக்கின்றோம்.

நான் தவிசாளராகப் பதவியேற்று ஒன்றரை வருடம் கடந்தும் இற்றைவரை உள்ளுராட்சி அமைச்சினால் எந்தவித நிதியும் ஒதுக்கப்படவில்லை.

கம்பெரலிய திட்டங்கள் எமது பிரதேச சபைக்கு ஊடாக செயற்படுத்தப்படுமானால் எமது சபைக்கும் ஓரளவு வருமானம் கிடைக்கும் இதற்கு அமைச்சர்கள் உதவிபுரிய வேண்டும்.

நாம் தற்போதைய வறட்சியால் பாதிக்ப்பட்ட 12 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு பவுசர்கள் மூலமாக தினமும் குடிநீர் வழங்கி வருகின்றோம்.

எமது பிரதேசத்திற்கு பல தேவைப்பாடுகள் உள்ளன இந்த விடயத்தை ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.

கருத்து தெரிவிக்க