உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 06 பேர் கைது

பொஹவந்தலாவ செபல்டன் தோடத்தில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

29 தொடக்கம் 44 வயதுக்கு இடைப்பட்ட பொஹவந்தாலாவை பிரதேசத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க