உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

பொகந்தலாவையில் குளவி தாக்குதல்: 15 தொழிலாளர்கள் பாதிப்பு

பொகந்தலாவையில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் நடந்த குளவித் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 15 தொழிலாளர்கள் இன்று (ஆக. 21) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் காலை 11 மணியளவில் நடந்ததாக நம்பப்படுகிறது.

காயமடைந்த தொழிலாளர்களில் 4 ஆண்கள் மற்றும் பதினொரு பெண்கள் அடங்குவதாக குறிப்பிடப்படுகிறது

கழுகு ஒன்று குறித்த குளவிகள் இருந்த மரத்தில் இருந்து பறந்ததைத் தொடர்ந்து குளவிகள் களைந்து தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க