உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

8 அரச நிறுவனங்கள் கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு

எட்டு அரச நிறுவனங்கள் கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஸ்ரீலங்கா விமான சேவை நேற்று கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டது.

இலங்கை சதொச நிறுவனம் இன்றைய தினம் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை மின்சார சபைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் செப்ரெம்பர் 3ம் திகதி இலங்கை கிரிக்கெட் குழுவின் அதிகாரிகளும் கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருப்பதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க