உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மாடியிலிருந்து வீழ்ந்த பெண்ணின் மரணம் தொடர்பில் விசாரணை

பொரலஸ்கமுவ வேரஹெர கொத்தலாவல வைத்தியசாலையின் 6வது மாடியிலிருந்து வீழ்ந்த பெண்ணின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த வைத்தியசாலையின் உளநல சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணொருவரே இவ்வாறு மாடியிலிருந்து கீழே குதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

28 வயதான குறித்த பெண் பன்னிப்பிட்டிய , மாலபல்ல பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணையின் போது வைத்தியசாலையின் பலரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க