உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

2018 – 2019 கல்வி ஆண்டுக்காக புதிய மாணவர்களைப் பதிவு செய்யும் பணி ஆரம்பம்

2018 – 2019 பல்கலைக்கழக கல்வி ஆண்டுக்காக புதிய மாணவர்களைப் பதிவு செய்யும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கட்டம் கட்டமாக இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இம்முறை 31,158 புதிய மாணவர்கள் உள்வாங்கப்பட இருப்பதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமதிலக தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கை முன்னைய ஆண்டிலும் பார்க்க 645 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க