சினிமா

நடிகர்கள் மத்தியில் முன்னெடுக்கப்படடடுள்ள புதிய சேலஞ்ச்

கடந்த வருடத்தைப் போன்றே இவ் வருடமும் கேரளாவின் பல மாவட்டங்கள் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் மக்கள் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி செய்யும் விதமாக அனைவரையும் ஊக்கப்படுத்தும் வகையில் மலையாள திரையுலக பிரபலங்கள் சேலஞ்ச் முறையில் நிதி உதவி அளிக்க வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக பிரபல மலையாள இயக்குனர் ஆஷிக் அபு என்பவர் நிவாரண நிதிக்கு தன்னால் இயன்ற உதவித்தொகையை அளித்து அந்த சான்றிதழை தனது வலைத்தளத்தில் வெளியிட்டு, இளம் முன்னணி நடிகர் டொவினோ தாமஸுக்கு இதே போன்று ஒரு சேலஞ்ச் விடுத்துள்ளார். அதனை ஏற்றுக்கொண்டு நடிகர் டொவினோ தாமஸும் நிவாரண நிதிக்கு உதவித்தொகை அளித்து அதனை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து மற்றைய இளம் நடிகர்களும் இந்த சேலஞ்சை நிறைவேற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை எத்தனயோ சேலஞ்ச்’களை வலைத்தளத்தில் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக இப்படி ஒரு நல்ல விஷயத்திற்காக இந்த ‘சேலஞ்ச்’ பயன்படுத்தப்படுவது பாராட்டிற்குரியதே.

கருத்து தெரிவிக்க