உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மூவரைத் தாக்கிய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை

கிளிநொச்சி மருதங்குளம் பகுதியில் காணிக்குள் அத்;துமீறிநுழைந்து காணி உரிமையாளர் மற்றும் அவரது மகன் உட்பட மூவரைத்தாக்கிய சந்தேக நபர்களை கைது செய்வதற்;கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேசத்திற்குட்பட்ட மருதங்குளம்பகுதியில் 3.17 ஏக்கர் காணியும் அதன் கீழான ஒதுக்கீட்டுக்காணி உள்ளடங்கலாக 3.75 ஏக்கர் வயல் காணியில் அதன் உரிமையாளர் இம்முறை சிறுபோக பயிர்ச்செய்கை மேற்கொண்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அதனை அறுவடை செய்து கொண்டிருந்த சமயம் காணிக்குள் அத்துமீறி நுழைந்த கமக்கார அமைப்பின் தலைவர் அயல் கமக்கார அமைப்பின் பொருளாளர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் குறித்த காணி உரிமையாளரையும் அவரது மகனையும் கடுமையாத்தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

காயமடைந்தவர்களைக்கொண்டு செல்வதற்காக சம்பவ இடத்திற்கு வந்த அவசர நோயாளர் காவுவண்டியில் மயக்கமுற்றநிலையில் இருந்த அவரது மகனை ஏற்றிச்செல்லவிடாது தடுத்திருந்தனர்.

இந்நிலையில் சம்பவஇடத்திற்கு பொலிசார் வருகைதந்த பின்னரே காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடரபில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கிளநொச்சிப்பொலிசார் நேற்று (10-08-2019)காயமடைந்தது வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ள மூன்று பேரிடமும் வாக்கு மூலங்களைப் பெற்றுள்ளதாகவும் இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந் தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளதாகவும் கிளிநொச்சிப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த காணியில் அதன் உரிமையாளரை சிறுபோக பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கான அனுமதிகளை கமக்கார அமைப்பு, பிரதேச செயலாளர், மாவட்ட கமநலஅபிவிருத்தி உதவி ஆணையாளர் ஆகியோர் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க