உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘அமுதப்பிரவாகம்’ நூல் வைபவ ரீதியாக வெளியீடு

மன்னாரின் எழுத்தாளர் அன்பழகி கஜேந்திரா எழுதிய ‘அமுதப்பிரவாகம்’ நூல் வெளியிட்டு விழா நேற்று சனிக்கிழமை(10) காலை 10 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.
மன்னார் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர் ஜே.ஆர்.மயூரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நூல் வெளியீட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் கலந்து கொண்டார்.
இதன் போது எழுத்தாளர் அன்பழகி கஜேந்திரா எழுதிய அமுதப்பிரவாகம் நூலினை பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் வைபவ ரீதியாக வெளியீடு செய்து வைத்தார்.
குறித்த நிழ்வில் எழுத்தாளர்கள்,கலைஞர்கள்,தமிழ்ச்சங்க பிரதி நிதிகள்,சர்வமத தலைவர்கள் உற்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க