உள்நாட்டு செய்திகள்புதியவை

சந்தேகநபர் ஒருவர் காவல் நிலையத்தில் உயிரிழப்பு

மட்டக்குளி-கதிரானவத்தை பகுதியில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் காவல் நிலையத்தில் வைத்து திடீர் என உயிரிழந்துள்ளார்.

குறித்த சந்தேகநபர் இன்று அதிகாலை வீடு ஒன்றில் கொள்ளையிட சென்ற பொழுது, பெண் ஒருவர் சத்தமிட்டதையடுத்து மூன்றாம் மாடியில் இருந்து கீழே குதித்த வேளை பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை 8.00 மணியளவில் குறித்த சந்தேகநபர் திடீர் என உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க