உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘வடக்கில் தும்பு தொழிற்சாலைகள்’

வடக்கில் ஐந்து தும்பு தொழிற்சாலைகள் திறக்கப்படவுள்ளன.

யாழ் மாவட்டத்தில் நான்கு தும்பு தொழிற்சாலைகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு தும்பு தொழிற்சாலையும் அமைக்கப்பட்டுள்ளன.

யாழ் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நான்கு தும்பு தொழிற்சாலைகள் நாளையதினம் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவினால் திறந்துவைக்கப்படும்.

முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள தும்பு தொழிற்சாலை எதிர்வரும் திங்கட்கிழமை திறந்துவைக்கப்படும்.

வடக்கிலும் தெங்கு தொழிற்துறையின் தங்க ஒளிக்கீற்று திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதன்மூலம் வடபகுதி மக்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்த முடியும்.

இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்ட முடியுமென அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க